13 வயது சிறுவனை கொலை செய்த 17 வயது சிறுவன்

11222பார்த்தது
13 வயது சிறுவனை கொலை செய்த 17 வயது சிறுவன்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த நிரவி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற 13 வயது சிறுவன் தனது பக்கத்து வீட்டில் நேற்று (மே 27) உடலில் 10 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சிறுவன் சடலமாக கிடந்த வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்த சந்தோஷின் சகோதரியிடம், 17 வயது சிறுவன் தவறாக நடந்து கொண்டதை தட்டிக்கேட்ட ஆத்திரத்தில் 13 வயது சிறுவனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி