“இனி நியாய விலைக்கடைகள் முழு நேரம் இயங்கும்”

முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் கட்ட ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஊராட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவித்துள்ளார். மேலும் அவர், "ஊரகப்பகுதிகளில் 10 புதிய மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ. 20 கோடியும், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.100 கோடியும், குழந்தை நேய வகுப்பறைகள் கட்ட ரூ.168 கோடியும், கசிவுநீர் குட்டைகள் மற்றும் மரம் நடுதல் பணிகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி