மின்வாரிய ஊழியர் வெட்டி படுகொலை

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி அடுத்த தர்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் உத்திராடம். இவர் நிலத்தகராறு காரணமாக நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி