11 மணி நேர போராட்டத்துக்கு பின் சிக்கிய சிறுத்தை

69பார்த்தது
11 மணி நேர போராட்டத்துக்கு பின் சிக்கிய சிறுத்தை
திருப்பத்தூரில் நேற்று (ஜுன் 14) மாலை பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அச்சுறுத்திய சிறுத்தை 11 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்டது. இன்று அதிகாலை 3 மணியளவில் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதனை ஓசூர் வனப்பகுதிக்குள் விடுவிக்க வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மேரி இம்மாகுலேட் பள்ளியில் சிறுத்தை ஒன்று நேற்று புகுந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் பல மணி நேரம் போராடி சிறுத்தையை பிடித்துள்ளனர். சிறுத்தை தாக்கியதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி