இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை - கணவன் கைது!

10764பார்த்தது
இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை - கணவன் கைது!
திருப்பத்தூர்: கந்திலி அருகே நரியனேரியை சேர்ந்தவர் ராமன் (30). இவர் சென்னையில் பானிபூரி கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி சூர்யா (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் ராமன் சென்னையிலிருந்து வீட்டிற்கு வந்தார். ராமனுக்கும், சூர்யாவுக்கும் இரவில் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராமன் மனைவியின் கழுத்தை நெரித்ததில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினரிடம் தனது மனைவி சூர்யா தூக்குப்போட்டு கொண்டதாக கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அவர்கள் சூர்யாவை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சூர்யா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சூர்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராமனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி