பாஜக பதில் சொல்லியே ஆக வேண்டும்: சசிகாந்த் செந்தில்

69பார்த்தது
பாஜக பதில் சொல்லியே ஆக வேண்டும்: சசிகாந்த் செந்தில்
ஒன்றிய பா.ஜ.க அரசின் நீட் தேர்வு குளறுபடியால் 24 லட்சம் மாணவர்களின் வாழ்வு சீரழிந்துள்ளது. ஒரே தேர்வு மையத்தில் 6 பேர் முதலிடம் பெற்றது மோடி அரசின் சாதனை என திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், தற்போது குஜராத்தில் பல கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நீட் தேர்வு சர்ச்சை தொடர்வதால் தான், 'அதனை வேண்டாம்' என்கிறோம். நீட் குளறுபடிகளுக்கு பா.ஜ.க., அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி