நேற்று இரவு, அன்னதான கூடத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை தின்னத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், பக்தர்களின் உதவியுடன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யானை புகுந்து உணவுப் பொருட்களை தின்ற சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இரவு முழுக்க மழைதான் - வானிலை மையம்