கோவை மாவட்டம், கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சபரி(21) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சபரி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்ததின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று சபரி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே சபரி சிறையில் உள்ள நிலையில், குண்டா தடுப்புச் சட்டத்திற்கான ஆணை அவரிடம் வழங்கப்பட்டது.