கோவை: தனியாக இருக்கும் வீடுகளுக்கு சிசிடிவி கேமரா அவசியம்; காவல்துறை

61பார்த்தது
கோவை: தனியாக இருக்கும் வீடுகளுக்கு சிசிடிவி கேமரா அவசியம்; காவல்துறை
தோட்டத்து வீடுகள் மற்றும் தனிமையில் வசிக்கும் வீடுகளில் சமீபகாலமாக கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டத்து வீடுகள், முதியவர்கள் தனியாக வசிக்கும் வீடுகள், மற்றும் சுற்றிலும் வீடுகள் இல்லாத தனிமை வீடுகள் ஆகியவற்றை காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. அதியமான் இன்று கூறுகையில், தனிமையில் வசிக்கும் வீடுகளை கண்டறிந்து, அங்கு ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தனிமை வீடுகளில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் தோட்டத்து வீடுகளில் உள்ளவர்கள் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பர்கலர் அலாரம் ஆகியவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும். மேலும், அண்டை வீட்டாருடன் அடிக்கடி கலந்துரையாட வேண்டும். பாதுகாப்புக்காக நாய்களை வளர்க்கலாம். இரவு நேர ரோந்துப் பணியின்போது, தனிமை வீடுகளில் உள்ள வருகைப் பதிவேட்டில் காவல்துறையினர் கையெழுத்திட்டு செல்வார்கள். சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி