கோவை: உலக சிறுநீரக தினம்; விழிப்புணர்வு பேரணி

66பார்த்தது
கோவை: உலக சிறுநீரக தினம்; விழிப்புணர்வு பேரணி
உலக சிறுநீரக தினத்தையொட்டி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மருத்துவக் கல்லூரி டீன் திருமதி. நிர்மலா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் சிறுநீரகத்தை பாதுகாப்போம், ஆரோக்கியமான உணவு சாப்பிடுவோம், உடல் பருமனை குறைப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணி டீன் அலுவலகத்தில் தொடங்கி மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் சிறுநீரகத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். சிறுநீரக நோயின் அறிகுறிகள் மற்றும் அதை தடுக்கும் முறைகள் குறித்து மருத்துவ மாணவர்கள் பொதுமக்களுக்கு விளக்கினர். மேலும், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி