மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்த கருத்துருவை பரிசீலிக்க கூடாது என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முல்லைப் பெரியாறு புதிய அணைக்கட்டும் கேரளா அரசின் கோரிக்கை தொடர்பாக வரும் 28ஆம் தேதி ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி முல்லைப் பெரியாறு, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ளக்கூடாது என அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி