BREAKING: ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்த அறிவிப்பில், 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது என கூறப்பட்டுள்ளது. ஜுன் 4ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்து பிறகு, ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி