ஸ்மார்ட்போன் வாங்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல்

85பார்த்தது
ஸ்மார்ட்போன் வாங்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல்
பள்ளிகளில் படிக்கும் தங்களது பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்துகொள்வதற்காக குறைந்த விலை ஸ்மார்ட் போன்களையாவது பெற்றோர்கள் வாங்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை பெற்றோருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது வரை 80 லட்சத்து 30 ஆயிரம் பெற்றோர்களின் மொபைல் எண்களை கல்வித்துறை உறுதி செய்துள்ளது. மேலும், இந்த மாதத்திற்குள் ஒரு கோடியே 25 லட்சம் மொபைல் எண்களும் உறுதி செய்யப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.