செருப்பு காலால் உதை.. தலித் மீது எஸ்ஐ தாக்குதல்..

66பார்த்தது
செருப்பு காலால் உதை.. தலித் மீது எஸ்ஐ தாக்குதல்..
தெலங்கானா மாநிலம் முழுகு மாவட்டம் ஏட்டூர் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா. இவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இடைத்தரகராக இருந்துள்ளார். இதுகுறித்த பிரச்னை காரணமாக ராமகிருஷ்ணாவை போலீஸ் நிலையத்திற்கு எஸ்ஐ அழைத்துள்ளார். அப்போது போலீஸ் நிலையத்தில் வைத்து ராமகிருஷ்ணாவை சாதிப் பெயர் சொல்லி திட்டி, கழுத்தைப் பிடித்து, காலணியால் வயிற்றிலும், முதுகிலும் எட்டி உதைத்துள்ளார். இதனால், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி