பைக் சாகசம் செய்த 2 இளைஞர்கள் பலி

575பார்த்தது
பைக் சாகசம் செய்த 2 இளைஞர்கள் பலி
தூத்துக்குடி குரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜீவானந்தம், பிரதீப்குமார். இருவரும் நேற்று (மே 23) இரவு தங்களது நண்பர் பூபதிராஜாவை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் வாகன சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது, இரு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஜீவனந்தமும் பிரதீப்குமாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பூபதிராஜா பலத்த காயமடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி