இதையடுத்து முசிறி காவல் உதவி ஆய்வாளர் சேகர் தலைமையில் முசிறி அரசு மருத்துவமனை முன்பு நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மொபட்டில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் வெள்ளூர் ஐவேலி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 33 என்பதும், மற்றொரு நபர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 31 என்பதும் தெரிந்தது.
இவர்கள் இருவரும் வெள்ளூர் செல்லாயி கோவில் தெருவில் மொபட் திருடியதும், மேலும் வெள்ளூர் சத்திரம் பகுதியில் பசுமாட்டை திருடியதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து மொபெட்டும், மாடு விற்ற பணம் 26 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.