சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வேக்கு 12 பெட்டிகள் கொண்ட 2 குளிரூட்டப்பட்ட மின் மோட்டார் யூனிட்டுகளை ஒதுக்கி உள்ளதாக வீட்டு வசதித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி கொண்டு வருவதன் மூலம், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.