புதிய ரேஷன் கார்டுக்கு 2 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு கேட்டு 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை இன்று (மே 24) அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 ரேஷன் கார்டுகள் இருப்பதாக உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி