தாமதமாக வரும் ரயில் - கூடுவாஞ்சேரி அலுவலகம் முற்றுகை

72பார்த்தது
தாமதமாக வரும் ரயில் - கூடுவாஞ்சேரி அலுவலகம் முற்றுகை
செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி செல்லக்கூடிய புறநகர் ரயில் கடந்த ஒரு மாத காலமாக குறிப்பிட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. தொடர்ந்து, ரயில் தாமதமாக வருவதாக பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இருந்தபோதிலும் அவர்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கூடுவாஞ்சேரி ரயில் நிலைய அலுவலகத்தை பயணிகள் இன்று (மே 24) முற்றுகையிட்டனர். மேலும், சரியான நேரத்திற்கு ரயில் இயக்க வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி