குற்றாலத்தில் குளிக்க மீண்டும் தடை

73பார்த்தது
குற்றாலத்தில் குளிக்க மீண்டும் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவியில் இன்று (மே 24) மாலை முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோல பழைய குற்றால அருவியில் இன்று காலை முதல் மாலை வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. 7 நாட்களுக்கு பின் தடை நீக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது. இந்த நிலையில், தொடர் மழை காரணமாக இன்று மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தடை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி