ரயில் மீது ஏறிய இளைஞர் உயிரிழப்பு

85பார்த்தது
ரயில் மீது ஏறிய இளைஞர் உயிரிழப்பு
சென்னை கொருக்கு பேட்டையில் சரக்கு ரெயில் மீது ஏறி விளையாடிய இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 19-வயதான இளைஞர் கவின் சித்தார்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு ரெயில் மீது ஏறி விளையாடி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சார வயர் மீது கவின் சித்தார்த்தின் கை பட்டுள்ளது. அடுத்த நொடியே மின்சாரம் உடலில் பாய்ந்து கவின் சித்தார்த் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே கவின் சித்தார்த் உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ரெயில்வே போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி