சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பள்ளி வேனின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 13 சிறுவர்கள் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் அருகே வளமாதேவி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது தனியார் பள்ளி வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.