டெல்லி-துபாய் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

85பார்த்தது
டெல்லி-துபாய் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திங்கள்கிழமை காலை 9:35 மணியளவில் துபாய்க்கு விமானம் டெல்லி விமான நிலையத்தில் தயாராக இருந்தது. டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் அலுவலகமான ஐஜிஐ விமான நிலையத்துக்கு, புறப்படவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி சிலர் மிரட்டல் கடிதம் அனுப்பியதாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி