திருமணமான 2 மாதத்தில் இளைஞர் தற்கொலை

51பார்த்தது
திருமணமான 2 மாதத்தில் இளைஞர் தற்கொலை
மதுரை: திருமணமான 2 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார். மேலூர் மேலவளவு அருகே புலிபட்டியைச் சேர்ந்த குமரேசன் (28) என்பவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மாதத்திற்கு முன்பு கரூரை சேர்ந்த வினிதா என்பவருடன் திருமணம் ஆனது. இந்நிலையில் ஊருக்கு வந்தவர் தனது மனைவி 2 நாட்களில் வருவார் என தாயிடம் கூறியுள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி