கூலி கேட்டதற்காக கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர்கள் (வீடியோ)

11072பார்த்தது
உ.பி., மாநிலம் ஆக்ராவில் கல் தொழிற்சாலையில் பணிபுரியும் இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். தொழிற்சாலையில் செய்த வேலைக்காக இளைஞர்கள் கூலி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நிர்வாகம் அந்த இளைஞர்களை ஒரு அறையில் வைத்து கடுமையாக தாக்கியது. ஒரு நபர் இளைஞர்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், கன்னத்தில் அறைந்தும், முகத்தில் உதைத்தும் மோசமாக நடந்து கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபரின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி