கள் விற்பனை தடை ஏன் நீக்க கூடாது? - உயர் நீதிமன்றம்

9025பார்த்தது
கள் விற்பனை தடை ஏன் நீக்க கூடாது? - உயர் நீதிமன்றம்
மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்டுகள், ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அனுமதி தரக்கோரிய வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாகவும் டாஸ்மாக்கில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் தமிழ்நாடு அரசு வருகிற ஜூலை 29ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி