பாம்பின் பற்களில் உள்ள நஞ்சு பையில் நஞ்சு சுரக்கிறது. பாம்பு ஒருவரை கடிக்கும் பொழுது இந்த நஞ்சானது வெளியேறி இரையின் உடலுக்குள் செல்கிறது. இந்த நஞ்சு இரையின் நரம்பு மண்டலத்தை உடனடியாக தாக்குகிறது. பின்னர் ரத்த குழாய்களையும், இரத்த அணுக்களையும் தாக்கி குருதியை உறைய வைக்கிறது. குருதி உறையும் பொழுது மூளை, இதயம் ஆகியவற்றிற்கு ரத்த ஓட்டம் நின்று போவதால் உடனடியாக மரணம் ஏற்படுகிறது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டால் உயிரை காப்பாற்றி விடலாம்.