ஒவ்வொரு நாயும் தன் எல்லையை வரையறுத்துக் கொள்கிறது. ஒருபுறம் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. மறுபுறம் நாய்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் அவைகளின் பரப்பளவு குறையத் தொடங்குகிறது. தங்களின் பகுதியை பாதுகாப்பது கடினமாகும் போது நாய்கள் பாதுகாப்பின்மையை உணர ஆரம்பிக்கின்றன. மனிதன் தங்கள் பகுதிக்குள் நுழைகிறான் என்று நினைக்க தொடங்கும் போது அவை ஆக்ரோஷமாக மாறி மனிதர்களை கடிக்கின்றன.