"பாரத் அரிசி" விற்பனை தொடக்கம் எப்போது?

85372பார்த்தது
"பாரத் அரிசி" விற்பனை தொடக்கம் எப்போது?
பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சாமானியர்களை கவருவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் 29 ரூபாய்க்கு 'பாரத் அரிசி'யை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பாரத் அரிசி இந்த வாரம் விற்பனை செய்யப்பட உள்ளது. நாட்டில் அரிசியின் சராசரி சில்லறை விலை ஒரு கிலோ ரூ.43.5 ஆகும். முந்தைய ஆண்டை விட 14.1 சதவீதம் அதிகம். பாரத் அரிசி வாங்க ரேஷன் கார்டு தேவையில்லை, மக்கள் ஒரே நேரத்தில் 10 கிலோ வரை வாங்கலாம். இந்த வாரம் பாரத் அரிசி வழங்கப்படும் நிலையில், மற்ற பொருட்களும் வரும் மாதங்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி