அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர் ஜென்னா சினாட்ரா. வயது 21. இவர் ஒருநாள் தீவிரமாக கொட்டாவிவிட்டபோது, அவரின் வாய் தாடை மூடாமல் அப்படியே திறந்தநிலையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது வாயை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்றுள்ளார். பின்னர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யும் ஒரு நிபுணரை ஜென்னா நாடியுள்ளார். அவரதுஉதவியின் மூலம் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் தற்போது அவரது வாய் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.