சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட தடை உத்தரவு

83பார்த்தது
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட தடை உத்தரவு
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உரிய அனுமதியின்றி எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளிதழில் வெளியான செய்தியை அறிந்து தாமாக முன்வந்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீரை தடுத்து மக்களுக்கு தேவையான நீர் தேவையை பூர்த்தி செய்யும் கலிங்கு தான் அமைக்கப்பட்டு வருகிறது என கேரளா அரசு தெரிவித்துள்ளது.