நான் ஓசில போகல! முறையா பயணச்சீட்டு வாங்கிதான் பயணம் பண்ணேன். காவல்துறையை கலங்கப்படுத்த தான் அவர் வீடியோ வெளியிட்ருக்காரு. பேருந்தில் டிக்கெட் கேட்ட விவகாரம் தொடர்பாக காவலர் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரில் இருந்து தூத்துக்குடி சென்ற காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க முடியாது என நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதனையடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நான் டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்தேன் என அந்த காவலர் கூறியுள்ளார்.