பெண்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் தரும் சூப்பர் திட்டம்

65436பார்த்தது
பெண்களுக்கு  ரூ.50 லட்சம் வரை கடன் தரும் சூப்பர் திட்டம்
ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தொழிலை விரிவுபடுத்த விரும்பும் பெண்களுக்காக 'ஸ்திரி சக்தி' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பெண்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.5 லட்சத்துக்கும் குறைவான கடனுக்கு ஜாமீன் எதுவும் தேவையில்லை. இந்தக் கடனைப் பெற விரும்பும் பெண்கள், தொழிலில் 50 சதவீத பங்குகளை வைத்திருக்க வேண்டும். வட்டி விகிதம் பெண்கள் நடத்தும் வணிகம் மற்றும் இதற்குமுன் பெற்ற கடனை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெரும் கடனை ஐந்து ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி