மேற்கு வங்கம்: ரயில் விபத்துக்கான காரணம் இதுதான்.!

81பார்த்தது
மேற்கு வங்கம்: ரயில் விபத்துக்கான காரணம் இதுதான்.!
மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்திற்கான காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது. டார்ஜிலிங்கில் சரக்கு ரயிலுக்கு சிகப்பு சிக்னல் காட்டப்பட்டுள்ளது. ஆனால் லோகோ பைலட் அதை கண்டு கொள்ளாமல் சென்றுள்ளார். அதே வழித்தடத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த நிலையில், இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்துள்ளன. சுதாரிப்பதற்குள் இரண்டு ரயில்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி