வயல்வெளியில் கிடந்த சிறுமியின் சடலம்

58பார்த்தது
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் டெல்லியின் கஞ்ச்வாலா பகுதியில் வயலில் சிறுமியின் சடலம் கடப்பதை கிராமவாசிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். உயிரிழந்த சிறுமி யார்.? அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி