சிகிச்சைக்கு தாமதம்.. கேள்வி கேட்டவர் மீது மருத்துவர் தாக்குதல்

53பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் அவசர நோயாளியை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர் வர தாமதமாகி உள்ளது. இதனால், நோயாளியின் உறவினர்களில் ஒருவர், தாமதிக்காமல் உடனடியாக நோயாளிக்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த மருத்துவர் அந்நபரை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி