குடிப்பதை நிறுத்த வேண்டுமா? - அமைச்சர் சொன்ன பதில்

55பார்த்தது
குடிப்பதை நிறுத்த வேண்டுமா? - அமைச்சர் சொன்ன பதில்
கணவர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்த பெண்கள் அவர்களை வீட்டில் மது அருந்த அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். தாய், மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் மது அருந்துவது ஆண்களுக்கு சங்கடமான சூழலை உருவாக்கும் என்று மத்தியப்பிரதேச சமூக நீதி அதிகாரமளித்தல் அமைச்சர் நாராயண்சிங் குஷ்வா தெரிவித்துள்ளார்.

இல்லத்தரசிகள் இந்த யோசனையை முயற்சி செய்ய வேண்டும் என்றும் வீட்டைவிட்டு வெளியே செல்ல கூடாது என அவர்களே மதுவை வாங்கிக் கொடுத்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. நாளைடைவில் குடிப்பழக்கமும் குறைந்து விடும் என்றார். வீட்டில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்தினால், உங்கள் பிள்ளைகள் மது கேட்பார்கள், அது மனந்திரும்புவதற்கு காரணமாகிவிடும் என்றும் ஆலோசனை கூறினார்.

தொடர்புடைய செய்தி