பாஜகவுக்கு விழும் ஓட்டு.. வதந்தி பரப்பியவர் கைது

81பார்த்தது
பாஜகவுக்கு விழும் ஓட்டு.. வதந்தி பரப்பியவர் கைது
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை விழுவதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இதனால் எம்.கே.பி நகர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வாக்குச்சாவடி முன்பு அதிமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் வாக்குப்பதிவு இயந்திர பொறியாளர், தேர்தல் அதிகாரி மின்னணு இயந்திரத்தை சரிபார்த்த போது கோளாறு இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வதந்தி பரப்பியதாக அதிமுக பிரமுகர் விஜய் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி