நாளை எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை

74பார்த்தது
நாளை எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (ஜுன் 19) திருச்சி செல்ல உள்ளார். நாளை காலை 6.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகை தரும் அவர், பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் மாலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை செல்கிறார்.

இதனால், தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி