வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி

78பார்த்தது
வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி
வயநாடு எம்.பி பதவியை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார். மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதனையடுத்து எந்த தொகுதியில் பதவியை ராஜினாமா செய்யலாம் என நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் வயநாடு தொகுதியில் எம்.பி பதவியை ராஜினாமா செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து இன்று வயநாடு தொகுதியில் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்புடைய செய்தி