விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையத்திற்குள் இன்று (அக்.,5) மாலை மது போதையில் இருந்த ஒருவர் அப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு சுற்றித்திரிந்த தெருநாயிடம் அட்ரா சிட்டி பண்ணி உள்ளார். சொறி பிடித்த தெருநாயை அந்த மது பிரியர் தூக்கிக் கொண்டும், அதனுடன் பேசிக்கொண்டும், ஜாலியாக விளையாடி கொண்டிருந்தார்.
இதனால் சுகம் கண்ட அந்தத் தெரு நாய் அந்த மதுபிரியரை விட்டு செல்லாமல் மீண்டும் அவருடன் சுற்றித்திரிந்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்திற்குள் அந்தத் தெரு நாயிடம் மதுப்பிரியர் அட்ரா சிட்டி செய்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.