ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயி கொலை. 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
விருதுநகர் மாவட்டம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே
விவசாயியை கொலை செய்த வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுரக்காய்பட்டியில் வசித்து வந்தவர்
கிருஷ்ணமூர்த்தி 47). இவர் விவசாயி, இவருக்கும் அதே பகுதியைசேர்ந்த சில நபர்கள் முன் விரோதம் இருந்து வந்ததாக
கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு காேசன் (32). மருதுபாண்டி (27),
மகாலிங்கம் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை கடுமையாகதாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலன் இல்லாமால் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன். மருதுபாண்டி, மகாலிங்கம் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தன. இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்த கணேசன், மருதுபாண்டி, மகாலிங்கம் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்ட ணையும், 3 பேருக்கும் தலா ரூ 12, 000 வீதம்
ரூ. 36ஆயிரம் அபராதமும் கட்ட வேண்டுமென தீர்ப்பு வழங்கி உத்தரவு வழங்கினர்.