ஸ்ரீவி: மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை....

83பார்த்தது
மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை - ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட மகிளா நீதிமன்றம் பரப்பரப்பு தீர்ப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி உட்கோட்டம் திருத்தங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுக்கிரார்பட்டி ரோடு, பராசக்தி காலனியை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் மகேஸ்வரன் (42), இவரது மனைவி சாந்தா, இருவரும் குடும்பத்துடன் இதே காலனியில் வசித்து வருகின்றனர். மேலும் மகேஸ்வரனுக்கு குடிபழக்கம் உள்ளதால் தினமும் குடித்து விட்ட மனைவி சாந்தாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12-04-2019 ஆம் தேதியன்று குடிபோதையில் வீட்டு வந்த மகேஸ்வரன் மனைவி சாந்தாவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ஆத்திரத்தில் மனைவி சாந்தாவை அடித்து கொலை செய்துவிட்டார். இக்கொலை வழக்கு திருத்தங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வந்த நிலையில் நேற்று மகேஸ்வரனை குற்றவாளி என அறிவித்த நீதிபதி பகவதியம்மாள், மேற்படி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ 10, 000 /- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று உத்தரவு வழங்கி உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி