மின்சார வயர் அறுந்து 16 வயது பள்ளி மாணவி சாவு

1528பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் N. சண்முகசுந்தராபுரம் பகுதியை சேர்ந்த கருத்தபாண்டி, பானுமதி தம்பதியினர். இவரது மகள் ஏஞ்சலி வயது 16 ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள திருவிக அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு முடித்துவிட்டு பன்னிரண்டாம் வகுப்பு செல்ல உள்ளார். இந்நிலையில் மாணவி ஏஞ்சலி N. சண்முகசுந்தராபுரத்தில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் தண்ணீர் குழாயில் துணி துவைத்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது தலைக்கு மேல் சென்ற மின்சார வயர் அறுந்து ஏஞ்சலி மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அருகே இருந்தவர்கள் மின்சார வயரினுள் சிக்கிய மாணவியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்து உடற்கூறு ஆய்விற்காக வைத்துள்ளனர். N. சண்முகசுந்தராபுரம் பகுதியில் இருக்கும் மின் கம்பங்களில் மின்சார வயர் தாழ்வாக செல்வதாகவும், அருந்துவிழும் சூழ்நிலையில் ஏராளமான மின்சார கம்பிகள் இருப்பதாகவும் அதை சரி செய்ய பலமுறை மின்வாரியத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இன்று பள்ளி திறக்க உள்ள நிலையில் நன்றாக படித்து விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவி ஏஞ்சலி மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் மின் வயர் அறுந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி