சிவகாசி: கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

59பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியில் திருத்தங்கல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு ஆனைக்குட்டத்தை சேர்ந்த அய்யங்காளை (23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரி டம் 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அய்யங்காளையை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி