அரசு பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்

61பார்த்தது
அரசு பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்
பெங்களூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பஸ்சில் 42 பயணிகள் பயணம் செய்தனர். இன்று காலை 9.30 மணியளவில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோடியூர் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்தநேரம் திடீரென டிரைவர் பிரேக் போட்டார். அப்போது பெய்த மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 20 பயணிகள் காயம் அடைந்தனர்.