சிவகாசி: ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்...

57பார்த்தது
சிவகாசி: ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்...
கொட்டும் மழையில், வெள்ளி ரிஷப' வாகனத்தில் எழுந்தருளிய சிவகாசி, ஸ்ரீபத்திரகாளியம்மன் - ஸ்ரீமாரியம்மன் சுவாமிகள்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப் பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த இரண்டு வாரங்களாக சிறப்பாக நடைபெற்று வந்தது. சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு, ஸ்ரீபத்திரகாளியம்மன் - ஸ்ரீமாரியம்மன் சுவாமிகள் இருவரும் சிறப்பு அலங்காரத்தில், கடைக்கோவிலில் வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளினர். இதனையடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஸ்ரீபத்திரகாளியம்மன் - ஸ்ரீமாரியம்மன் சுவாமிகள் 'வெள்ளி ரிஷப' வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். சுவாமி வீதியுலாவின் போது தொடர்ந்து சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. கொட்டும் மழையில் நனைந்து கொண்டே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி