சிவகாசி: பெட்ரோல் குண்டு வீசும் பதற வைக்கும் சிசிடிவி காட்சி.

61பார்த்தது
சிவகாசியில் வாலிபர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாலிபர் வீட்டில் அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீச்சு. பதற வைக்கும் சிசிடிவி காட்சி. சமூக வலை தளங்களில் பரவியதால் பரபரப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே திருத்தங்கல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் தமிழரசன்(23). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தங்கலில் குடிபோதையில் நள்ளிரவில் ஏற்பட்ட தகறாறில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார் இந்நிலையில் தமிழரசன் வீட்டில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் பெட்ரோல் குண்டு பாட்டிலை மர்ம நபர்கள் வீசிவிட்டு தப்பி சென்றனர். அது வெடித்ததில் வீட்டின் முன்பக்க கதவு தீப்பிடித்து எரிந்தன. சத்தம் கேட்டு அக்கம் பக்கதினர் வந்து தீயை அணைத்ததா கூறப்படுகின்றது. இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டன, அதனை தொடர்ந்து அங்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீஸார் ஆய்வு செய்தனர். விசாரணையில் பாட்டிலில் பெட்ரோலை அடைத்து அதில் திரி போட்டு தீ பற்ற வைத்து வீசப்பட்டது தெரியவந்தது. இதை வீசியவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து 4பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக வாலிபர் தமிழரசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றது என தெரிய வந்தது. மேலும் 4 பேரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி