சிவகாசி: அதிமுகவை நாசம் செய்தவர் மோடி தான்-லியோனி.

2951பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் அம்பேத்கர் சிலை அருகே இண்டியா கூட்டணியில் இடைப்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாணிக்கதாகூர்
எம் பி யைஆதரித்து திண்டுக்கல் ஐ. லியோனி பேசுகையில், விடியல் பயணம் மூலம் பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்கின்றனர்,

இந்தியாவில் கடன் வாங்கிய 9 பேர் வெளிநாட்டில் பதுங்கி உள்ளனர். அந்த நாய்களை வாங்கி உள்ள 20 ஆயிரம் கோடியை பறிமுதல் செய்து மகாலட்சுமி திட்டம் மூலம் பெண்களுக்கு ஆண்டு 1 லட்சம் வழங்கப்படும். தமிழகத்தில் பன்னீர்செல்வம் பலாப்பழமாக இருக்கிறார், பழனிச்சாமி எடப்பாடியில் இலந்த பழம் விற்க உள்ளார். பழனிச்சாமி சொல்கிறார்,

ஸ்டாலினுக்கு ஏழரை சனி என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜென்ம சனி, ஒரு தலைவர் என்றால் அடையாளமாக ஏதாவது திட்டம் இருக்க வேண்டும். எம்ஜிஆர் என்றால் சத்துணவு திட்டம், ஜெயலலிதா என்றால் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், பாடநூல் கழகத்தை கல்வியில் கழகம் மூலம் 11 இலவச பொருட்களை வழங்கியது ஜெயலலிதா அம்மாதான் என்றார்.

மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் சட்ட மன்ற உறுப்பினர் அசோகன், மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் உள்பட இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி