முரசொலி செல்வத்தின் உடல் இன்று தகனம்

79பார்த்தது
முரசொலி செல்வத்தின் உடல் இன்று தகனம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிக்கையாளருமான முரசொலி செல்வத்தின் உடல் இன்று (அக்., 11) மாலை 4 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது. முரசொலி செல்வம் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (அக்., 10) உயிரிழந்தார். அவரது உடல் நேற்று சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது மறைவையொட்டி பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி